தமிழ்நாடு அரசு சீட்டு விற்பனை எழுத்தர் மற்றும் தட்டச்சர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023
திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், சிவன்மலை, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள வெளித் துறை மற்றும் தொழில்நுட்ப பணியிடங்களில் கீழ்க்காணும் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதியுடைய 18 முதல் 45 வயது நிரம்பிய இந்து மதத்தை சேர்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வழக்கு எழுத்தர்- 1

சம்பளம் ரூ.18500 –58600

பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

சீட்டு விற்பனை எழுத்தர்-02

பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

சம்பளம் ரூ.18500 –58600

தட்டச்சர் -01

சம்பளம் ரூ.18500 –58600

பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி மற்றும் அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருத்தல்

கணினி பயன்பாடு மற்றும் அலுவலக தானியக்கத்தில் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

காவலர்-04

சம்பளம் ரூ.15900-50400

தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்

தோட்டக்காரர் -01

சம்பளம் ரூ.11600-36800

தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்

திருவலகு -02

சம்பளம் ரூ.15900-50400

தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்

கூர்க்கா -01

சம்பளம் ரூ.15900-50400

தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்

உதவி மின் பணியாளர்-01

சம்பளம் ரூ.16600-52400

அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின் / மின் கம்பிப் பணியாளர் தொழிற்பயிற்சி நிறுவன சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

மின் உரிமம் வழங்கல் வாரித்திடமிருந்து எச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவம், தகுதிகள் மற்றும் இதர விவரங்கள் https://sivanmalaimurugan.hrce.tn.gov.in என்ற திருக்கோயில் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய தகுதி சான்றுகளுடன் நேரடியாகவோ /தபால் மூலமாகவோ 17.05.2023 மாலை 5:45 மணிக்குள் திருக்கோயில் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : உதவி ஆணையர் /செயல் அலுவலர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சிவன்மலை -638701, காங்கேயம் வட்டம், திருப்பூர் மாவட்டம்.

NOTIFICATION CLICK HERE

By M

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *